Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • கடல் புறா - முதல் பாகம்

    de sandilyan ...
    அக்கம் பக்கத்தில் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொண்டே கோடியிலிருந்த தனியிடமொன்றை அடைந்த சுங்க அதிகாரி, இளைஞன் அருகில் வந்ததும், "நீங்கள் அணிந்துள்ள மோதிரத்தின் மதிப்புத் தெரியுமா உங்களுக்கு?" என்று பயத்துடன் வினவினான்.அவன் சொற்களின் உண்மைக் கருத்தைப் புரிந்து கொண்டாலும், புரியாதது போல் நடித்த இளைஞன், "தெரியும், ஆயிரம் பொற்கழஞ்சுகள். அதற்குச் சுங்கம் உண்டானால் விதியுங்கள்" என்று கூறி சுங்க அதிகாரியைக ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • கவர்ந்த கண்கள்

    de sandilyan ...
    அந்தப் பெண் தனது கண்களை அந்த வாலிபன் மீது திருப்பினாள். காலை வெயிலில் காவிரிப் படித்துறை உச்சியில் நின்ற கட்டுமஸ்தான அவன் தேகம் பொன்னிறமாகப் பளபளத்தது. திரண்டு உருண்ட... கைகள் அவன் இணையிலா வலுவுக்கும் உழைப்புக்கும் சான்று கூறின, அகன்ற திண்ணிய மார்பு அவன் எலும்பில் ஒன்றைக்கூட வெளியே காட்டாமல் இரும்புப் பாளம் போல் இருந்ததால், அந்த மார்பில் தாக்கும் எதற்கும் அவஸ்தை தான் என்பது மிக நன்றாகத் தெரிந்தது. ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • இளைய ராணி

    de sandilyan ...
    அரசன் பெயர் ஜெயசிம்மன். சேனாதிபதியின் பெயர் ஜெயபாலன். இருவரும் ஆயுள் முழுவதும் தோல்வியைத் தவிர வேறெதையும் கண்டதில்லை. மொகலாயர்களின், கையாட்களாகவே காலங்கழித்து விட்டார்கள்.இருவரும் பலமுறை போருக்குச் சென்றிருக்கிறார்கள். ராஜபுதனத்தின் கௌரவத்தைக் காப்பாற்றவோ, இருபத்தைந்து வருஷங்களுக்கு மேல் மொகலாய சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தை உலுக்கி அக்பரையே கலங்கச் செய்துவிட்ட பிரதாபசிம்மன் குலமானத்தைக் காக்கவோ இவர ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • மாதவியின் மனம்

    de sandilyan ...
    கதிரவன் மலை வாயில் விழும் மாலைக்காலம் நெருங்கி விட்டதால், ஜெயின, புத்த, சிவ, விஷ்ணு ஆகிய நான்கு காஞ்சிகளும் ஒரே சுவர்ண காஞ்சியாக எங்கும் பொன் பூச்சைத் தீட்டிவிட்டதன் காரணமாக, அது கண்ணை மயக்கும் காஞ்சியாயிருந்ததேயொழிய மனத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கும் நகரமாயில்லையென்பதை, அப்பொழுதே மூடத் தொடங்கிவிட்ட அதன் பெரும் வாயிற்கதவுகள் போட்ட பயங்கரச் சப்தமும், அம்மாநகரத்தின் மதில்கள் மீது வீரர்கள் ஏற்றத் தொடங ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • கன்னி மாடம்

    de sandilyan ...
    அபராஜிதன் இதற்குப் பதில் சொல்லாமல் ஏதோ சிந்திக்கத் தொடங்கினான். அவன் சிந்தனையைத் துண்டித்துக் கருணாகரத் தேவன் பேசலானான் "பிரபு! நாடு சிதறிவிடப் போகிறது. நாலாபக்கங்களிலும் யுத்த மேகங்கள் கவிந்து நெருங்குகின்றன. பாண்டிய நாடு சிங்களவர் கைகளில் சிக்கிக் கொண்டிருப்பதை விரும்பாத சோழ மன்னனான ராஜாதிராஜன் பாண்டிய நாட்டைத் தாக்கச் சித்தமாகிறான். இலங்காபுரனால் கீழைமங்கலத்தையும் மேலைமங்கலத்தையும் அடைந்த குறுந ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • ராஜ பேரிகை - முதல் பாகம்

    de sandilyan ...
    அதற்கு மேல் கேள்வி ஏதும் கேட்காத அமைச்சர் உள்ளே போகலாம் என்பதற்கு அறிகுறியாகத் தமது கையை அசைத்தார். அடுத்த விநாடி அடிமேலடி வைத்துப் பட்டாடையாரும் அவரோடிருந்த மற்றொருவரும் வழிகாட்ட, முன்னால் அந்த முக்காடிட்ட பெண்ணும், அவளுக்குப் பின்னால் வாளின் மேல் கையை வைத்த வண்ணம் அமைச்சரும் சென்றார்கள். மிக நிதானமாகவும் அடக்கத்துடனும் சென்ற அந்த நால்வரும் உட்பிராகாரத்துக்குள் நுழைந்து வலம் வந்து அரங்கன் சந்நித ... Leer más

    $3.00 USD o gratis con Kobo Plus

  • அலை அரசி

    de sandilyan ...
    அந்த மரக்கலம் கடலின் அந்த இருளிலும் அலைகள் மந்தமாகிவிட்டதால் ஏற்பட்ட அமைதியிலும் மாலுமிகளே இல்லாததாலோ என்னவோ எந்தவித அரவமும் இல்லாமல் பிசாசைப் போல் நின்று கொண்டிருந்தது. அத்தகைய அந்த மரக்கலம் எங்கிருந்து வந்தது? எந்த நாட்டைச் சேர்ந்தது? என்பதை அறிய எந்தவித அடையாளங்களையும் அதில் காணோம். இளவழுதியும் அராபியனும் அந்த மரக்கலத்தில் ஏறிய பிறகு திடீரென மேகங்கள் சூழ்ந்து பெரிய ஒரு மின்னல் அந்த மரக்கலத்தின் ... Leer más

    $5.00 USD o gratis con Kobo Plus

  • நீலரதி

    de sandilyan ...
    போர்வையை அகற்றி எழுந்து உட்கார்ந்த நிலையிலும் இளமாரன் அதிக உயரமிருந்தான். உறுதியுடனும் நீண்டும் திரணை திரணையாக இருந்த கைகளிலிருந்த வடுக்களும் மார்பில் குறுக்கே தெரிந்த நீண்ட வாள் வடுவும், முகத்திலிருந்த இரண்டொரு தழும்புகளும் அவன் பல போர்களைக் கண்டவன் என்பதை வலியுறுத்தின. அவன் பரந்த முகத்தில் வளைந்த புருவங்கள் கருத்திருந்தாலும் தலைக்குழலில் ஏதோ ஓரிரண்டு நரை மயிர்கள் தென்படத் தொடங்கியதால் இளமாரன் அத ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • வசந்த காலம்

    de sandilyan ...
    அந்தப் பெண் மெள்ள நகைத்துவிட்டு, "அப்பா! பெண்ணாகிய நானே துணிந்து வந்திருக்கிறேனே! உங்களுக்கு என்ன பயம்?" என்று கேட்டாள்."இளவரசி! நீங்கள் பெண்ணாயிருந்தாலும் ஆயிரம் ஆண்பிள்ளைகளுக்குச் சமம். இல்லாவிட்டால் துணிந்து இந்த இடத்துக்கு வந்திருக்க மாட்டீர்கள்" என்றான் சிவிகை ஆள், அத்தனை பயத்திலும் விஷமத்தை மட்டும் கைவிடாமல். இதைக் கேட்ட மற்ற ஆட்கள் மெள்ளப் புன்முறுவல் பூத்தார்கள்.இளவரசியை அப்படி அவமதிப்பாகப ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • விஜய மகாதேவி - முதல் பாகம்

    de sandilyan ...
    சமத் அடுத்த ஆணைக்குக் காத்திருக்கவில்லை. சட்டென்று தனது புரவியைத் திருப்பி, குடிசைக் கூட்டத்தை நோக்கிச் சென்றவன் சிறிது நேரத்தில் ஒரு கிழவனுடன் திரும்பி வந்தான். "இவன் நம்மை எதிர்க்கரைக்குக் கொண்டுபோக ஒப்புக் கொள்கிறான்." என்று அறிவித்தான்.விஜயன் கிழவனை நோக்கினான். "உன்னால் இந்தப் பிரவாகத்தைக் கடக்க முடியுமா?" என்று வினவவும் செய்தான்."ஏன் முடியாது?" - கிழவனின் கேள்வியில் சிறிது சினம் தெரிந்தது."உன ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • மன்னன் மகள்

    de sandilyan ...
    பெரியவர் அவனை ஏறெடுத்துப் பார்த்து, "தம்பி! வாழ்க்கையில் வாளுக்கு வேலை குறைவேயில்லை. மனிதர்களுக்கு ஆசையிருக்கும் வரையில் சச்சரவு உண்டு. சச்சரவிருக்கும் வரையில் போர்க்கருவிகளுக்கு வேலை உண்டு. அதுவும் கொந்தளிக்கும் நிலைமையிலுள்ள இந்தப் பாரத பூமியில் உன் வாளுக்கென்ன, புத்திக்கும் நிறைய வேலை கிடைக்கும். கௌடில்யனுடைய அர்த்தசாஸ்திரத்தைப் பூராவாகப் படித்திருக்கும் உனக்கு, ராஜதந்திரத்தைப் பற்றிச் சொல்லிக் ... Leer más

    $6.99 USD o gratis con Kobo Plus

  • நீள்விழி

    de sandilyan ...
    காவிரியின் நீர் இரண்டு மூன்று இடங்களில் அரித்து அழகாக ஓடிக்கொண்டிருந்தது. அதன் தண்புனலில் குளித்து அன்றைய பயணத்தின் ஆயாசத்தைத் தீர்த்துக் கொள்ள இஷ்டப்பட்ட அந்த வாலிபன் கோட்டையின் வட பாகத்து மதிலை நோக்கிச் சென்றான். மதிலை அடைந்து வாயிலையும் தாண்டியிருப்பான்; அவனைத் தாண்டவிடாது அடித்தது சற்று எட்ட இருந்த வாவியொன்று. அந்த வாவியின் அழகு அவன் இதயத்தைக் கொள்ளை கொண்டது. பச்சை பச்சையாக வட்ட வட்டமாக நீரின் ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus